சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கு: இதுவரை 16 பேர் கைது

மும்பை சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கு: இதுவரை 16 பேர் கைது
x
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே  இது குறித்து கூறுகையில், மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை, அக்டோபர் 7ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்