பேருந்து மோதி 3 கார்கள் சேதம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சாலையின் ஓரம் நிறுத்திவைக்கப்பட்ட கார் மீது கேரள அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து மோதி 3 கார்கள் சேதம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
x
கேரள மாநிலம், நிலமேல் பகுதியில் அபாயகரமான வளைவு பகுதி உள்ளது. இந்த பகுதியில் வந்த  கேரள அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்தி விட்டு கட்டுப்பாடு இல்லாமல் சாலையின் எதிர் பக்கமாக இருக்கும்  இரும்பு தூணில் மோதி பேருந்து நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்