2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
x
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இயற்பியல், வேதியியில், பொருளாதாரம், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு சுயுகுரோ மனாபே, க்ளாஸ் ஹாசெல்மென் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சுயுகுரோ மனாபே மற்றும் க்ளாஸ் ஹாசெல்மென் ஆகியோருக்கு புவியின் பருவநிலை மாற்றத்தை அளவிடுவதற்கான ஆராய்ச்சிக்காகவும்,

ஜார்ஜியோ பாரிசிக்கு, சிக்கலான இயற்பியல் அமைப்புகளில் உள்ள ஒழுங்கற்ற தன்மை மற்றும் பரிணாம மாற்றங்கள் குறித்த கண்டுபிடிக்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்