"பாக். ராணுவம், ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது" - பாகிஸ்தான் தீவிரவாதி வாக்குமூலம்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதியைக் கைது செய்த இந்திய ராணுவம், தீவிரவாதி அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளது.
பாக். ராணுவம், ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது - பாகிஸ்தான் தீவிரவாதி வாக்குமூலம்
x
வடக்கு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய உரி பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அலி பாபர் பாத்ரா என்கிற தீவிரவாதியை இந்திய ராணுவம் நேற்று கைது செய்தது. இவருடன் சேர்ந்து 6 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற நிலையில் அவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்நிலையில் அலி பாபர் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தன்னுடைய வறுமையை பயன்படுத்தி பாகிஸ்தானின் ISI தன்னை மூளைச்சலவை செய்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர வற்புறுத்தியதாக அலி பாபர் பாத்ரா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ் ஐ யும் சேர்ந்து தமக்கு பயிற்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கார்ஹி ஹபிபுல்லா என்ற இடத்தில் 3  வாரங்கள் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கியதாகவும், 6 தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்