"பட்டாசு வெடிப்பு - 6 மணி நேரமாக உயர்த்துங்கள்" - பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால மனு

பட்டாசு வெடிக்கும் நேரத்தை 6 மணி நேரமாக உயர்த்தக்கோரி, பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
பட்டாசு வெடிப்பு - 6 மணி நேரமாக உயர்த்துங்கள் - பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால மனு
x
பட்டாசு வெடிக்க ஏற்கனவே காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என 2 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நாட்டில் நிலவும் மத சடங்குகள், பண்பாடு, பல்வேறு சடங்குகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 6 மணி நேரமாக உயர்த்த வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்