"உயர் கல்வி மாணவர்களுக்கு சுற்றுலா" - பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு

உயர்கல்வி பயிலும் மாணவர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி மாணவர்களுக்கு சுற்றுலா - பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு
x
உயர்கல்வி பயிலும் மாணவர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய சுற்றுலாத்தலங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், குற்றாலம், ஏற்காடு, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய 6 சுற்றுலாத்தலங்கள் இடம்பிடித்துள்ளன. மாணவர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்வது மூலம், நாட்டின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அறிந்திட உதவும் என யூ.ஜி.சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்