பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை - மன அழுத்தம் காரணம் என தகவல்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை - மன அழுத்தம் காரணம் என தகவல்
x
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கைதகரா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வந்தார். மாணவியை மிரட்டிய விஷ்ணு என்பவன், சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். தொந்தரவு தாங்கமுடியாமல், சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் கூறியுள்ளார்.
இதன் பேரில் விஷ்ணு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த விவகாரத்தில் சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கினர். எனினும், வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து  சிறுமி, தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்