ஆபாச படங்களை விற்பனை செய்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

ஆபாட படங்களை எடுத்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆபாச படங்களை விற்பனை செய்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
x
ஆபாச படம் எடுத்து அதனை விற்பனை செய்த குற்றத்திற்காக கடந்த ஜூலை மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.  பின்னர்  ராஜ் குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்கில் இருந்து 119 ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளதாகவும், அதனை 9 கோடி ரூபாய்க்கு  விற்பனை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் ஆபாச வீடியோக்களை எடுத்ததாக இருவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுத்த நிலையில் ராஜ்குந்த்ராவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்,   2மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் ராஜ்குந்த்ரா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய, அதற்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அறிந்த ஷில்பாஷெட்டி, மோசமான புயலுக்கு பின் அழகான தருணங்கள் நிகழலாம் என இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்