கல்லூரிக்குள் புகுந்து பெண்களுக்கு கத்தி குத்து: தாக்குதல் ஏன்? - போலீசார் விசாரணை

மங்களூருவில் கல்லூரி பெண் பணியாளர்கள் மீது அதே கல்லூரியில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரிக்குள் புகுந்து பெண்களுக்கு கத்தி குத்து: தாக்குதல் ஏன்? - போலீசார் விசாரணை
x
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள தனியார் கல்லூரிக்குள் புகுந்த ஒருவர், அலுவல பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண் ஊழியர்களை கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியது அதே கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் பணியாற்றிய நவீன் என்பது தெரியவந்த‌து. இதையடுத்து நவீனை கைது செய்த போலீசார், பெண் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்