பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா - புதிய முதல்வராக சுனில் ஜஹாட் நியமிக்க வாய்ப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அமீர்ந்தர் சிங் தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
x
பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அமீர்ந்தர் சிங்  தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் தற்போதைய முதலமைச்சரை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் அமீர்ந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய அமீர்ந்தர் சிங், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார், தாம் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாகவும் அமீர்ந்தர் சிங் வேதனை தெரிவித்தார். இந்த நிலையில் புதிய முதல்வராக சுனில் ஜஹாட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்