புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை
x
புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆஃப்ரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத்துறை அலுவலக வளாகங்களை பிரதமர் மோடிநேரில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், புதிய இந்தியாவின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப நாட்டின் தலைநகரத்தை மேம்படுத்தும் முயற்சியில் இன்று மற்றுமொரு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார். கொரோனா ஏற்படுத்திய சவால்களால் இரண்டு ஆண்டுகள் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த வளாகம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் புதிய நாடாளுமன்ற கட்டிடமும் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கொள்கை, நோக்கம், மனஉறுதி, தீவிர முயற்சி இருந்தால் அனைத்துமே சாத்தியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்