ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் - இளம்பெண்ணை குச்சியால் அடித்து துன்புறுத்திய இளைஞர்
ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ராம கொண்டையா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது 2 மாதங்களுக்கு முன்பாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், தன் ஆசைக்கு இணங்க அந்த பெண்ணை வற்புறுத்திய போது அவர் அதற்கு மறுத்ததால் துன்புறுத்தியதாக தெரிவித்தார். அந்த வெங்கடேஷ் அந்த இளம்பெண்ணை தாக்குவதை செல்போனில் படம் பிடித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story