2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைது - ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்

2 தீவிரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைது - ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
x
2 தீவிரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேட்டியளித்த டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் நீரஜ் தாக்குர், இணை ஆணையர் பிரமோத் குஷ்வஹா, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற நூல் சந்த் லாலா, அமீர் ஜாவீது ஆகிய இரு தீவிரவாதிகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். நாடு முழுவதும் அவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். 6 பேரில், ராஜஸ்தானில் இருந்து ஒருவர், டெல்லியிலிருந்து இருவர், உத்தர பிரதேசத்திலிருந்து மூவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், இவர்கள் இரு குழுவினராக இருந்ததும், அதில் ஒரு குழுவை தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் ஒருங்கிணைத்ததும் தெரிய வந்துள்ளது. ஒரு குழுவுக்கு ஆயுதங்களை கடத்தி பதுக்கி வைக்கவும், மற்றொரு குழுவுக்கு ஹவாலா வழியாக பயங்கரவாத அமைப்புக்கு பணத்தை திரட்டி உதவவும் உத்தரவிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்