75 கோடி தடுப்பூசிகளை செலுத்திய இந்தியா - உலக சுகாதார அமைப்பு பாராட்டு

நாடு முழுவதும் 75 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.
75 கோடி தடுப்பூசிகளை செலுத்திய இந்தியா - உலக சுகாதார அமைப்பு பாராட்டு
x
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூணம் கெட்ராபால், அசாதாரண வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இந்தியா அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். முதல்10 கோடி தடுப்பூசிகளை செலுத்த இந்தியாவில் 85 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், தற்போது 13 நாட்களில் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்