6மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு பாராட்டு - 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி அசத்தல்

இந்தியாவில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுதியுள்ள அனைவருவருக்கும் நூறு சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
6மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு பாராட்டு - 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி அசத்தல்
x
அதன் படி, ஹிமாச்சல் பிரதேசம், கோவா, சிக்கிம், லட்சத்தீவு,  தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ  ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாத்ரா நகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூவில் ஆறு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கும்,  கோவாவில் 11 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கும், 

லட்சத்தீவில் 53 ஆயிரத்து 499 பேருக்கும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 55 லட்சத்து 74 ஆயிரம் கொரோனா தடுப்பூசியும், 

லடாக்கில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேருக்கும், சிக்கிமில் ஐந்து லட்சத்து 10 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த ஆறு மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களை பாராட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்