ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 6.20 மணிக்கு ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானம் சென்ற சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து மீண்டும் திருவனந்தபுரம் திரும்பிய விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் 170 பயணிகள் பாதுகாக்கப்பட்டனர்.
Next Story