இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்: சவால்களை எதிர்கொள்ளும் பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்: சவால்களை எதிர்கொள்ளும் பசவராஜ் பொம்மை
x
அண்மையில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற நிலையில் இன்று தொடங்கும் கூட்டத் தொடரில் எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அத்யாவசிய பொருட்களின் விலையேற்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள நிவாரண நிதிகள், மைசூர் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை கையிலெடுத்துள்ள எதிர்கட்சிகள், ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவில் உள்ளன. இதெல்லாம் இருந்தாலும், முதலமைச்சரின் தலைமையில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு சவாலானதாகவே அமையும் என கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்