மயக்க மருந்து கொடுத்து ரயிலில் 3 பேரிடம் இருந்து 15 சவரன் திருட்டு- சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை
திருவனந்தபுரம் சென்ற ரயிலில் பயணித்த கோவையைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாமுதீனில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரள மாநிலத்தை சேர்ந்த விஜயகுமாரி அவரது மகள் அஞ்சலி, கோவையை சேர்ந்த கவுசல்யா ஆகியோர் பயணித்தனர். ரயில் திருவனந்தபுரத்திற்கு சென்றடைந்த நிலையில் 3 பேரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். ரயில்வே போலீசார் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் கோவை ரயில் நிலையத்தில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அஸ்கர் பாஷா என்பவர் பழகியுள்ளது சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர். மேலும், தண்ணீர் பாட்டிலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 பேரிடம் இருந்து 15 சவரன் நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையன் அஸ்கர் பாஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story