ஒரே நாளில் கொரோனா பாதிப்பு - 20,240 பேர்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,75,431 ஆக உயர்வு
கேரளாவில் மேலும், 20 ஆயிரத்து 240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை
43 லட்சத்து 75 ஆயிரத்து 431 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 67 பேர் மரணமடைந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 41 லட்சத்து 30 ஆயிரத்து 65ஆக உயர்ந்தது.
Next Story