கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: "கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் சேவை" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆயிரத்து 500 பணியாளர்கள் பணிகளை துவக்கியுள்ளதாக கேரள சுகாதாரதுறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தமது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் கடந்த ஒரு ஆண்டுகளில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக 4 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கொரோனா தொடர்பான சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், அவசர உதவி அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கூட்டு முயற்சிகளே இதற்குக் காரணம் என தெரிவித்தார். இந்த கால கட்டத்தில் 108 ஆம்புலன்சில் 3 பிரசவங்களும் நடைபெற்றதாக தெரிவித்த அவர், 38 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான சேவை வழங்கப்பட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story