நிர்பயா சம்பவத்தை போன்ற கொடூரம் - மும்பையில் 34 வயதான பெண் டெம்போ வேனில் வைத்து கொடூர பலாத்காரம்
மும்பையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை புறநகர் பகுதியான சஹிநாகாவில் வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 34 வயதான பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்ததில் அவரின் மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை வைத்து சிதைத்ததும் தெரியவரவே பெரும் அதிர்ச்சியடைந்தனர் மருத்துவர்கள். நிர்பயாவை போலவே கொடூரமாக அந்த பெண் தாக்கப்பட்டதும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே பெண்ணை கொடூரமாக தாக்கிய மோகன் சவுகான் என்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். இவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை பலியானார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
உயிரிழந்த அந்த பெண் யார்? அவரை கொலை செய்த நபர் யார்? இதுபோன்ற கொடூர கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் டெல்லியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவரும் இதே பாணியில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இப்போது மும்பையில் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது மக்களை அச்சமடைய வைத்துள்ளது...
Next Story