டெம்போவில் வைத்து பெண்ணிற்கு வன்கொடுமை - இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

டெல்லி நிர்பயாவை போல் மும்பையில் டெம்போ வாகனத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெம்போவில் வைத்து பெண்ணிற்கு வன்கொடுமை - இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
x
டெல்லி நிர்பயாவை போல் மும்பையில் டெம்போ வாகனத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மும்பையின் புறநகர் பகுதியான கைராணி சாலையில் டெம்போவில் இருந்த பெண்ணை ஆண் ஒருவர் பலவந்தமான தாக்குவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் டெம்போ முழுவதும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட்டிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை தாக்கிக் கொண்டிருந்த மோகன் சவுகான் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 34 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை டெம்போவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தததுடன், அவரது உறுப்புகளில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார். மும்பையின் புறநகரில் பெண்ணிற்கு நிகழ்ந்த இந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்