லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி எச்சரிக்கை

லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி எச்சரிக்கை
லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை  - குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி எச்சரிக்கை
x
லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை  - குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி எச்சரிக்கை

லவ் ஜிதாத் மற்றும் பசுவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குஜராத் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதை பாரம்பரிய தொழிலாக கொண்ட மால்தாரி சமுதாய மக்களிடையே குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உரையாற்றினார். அப்பொழுது பசு வதையில் ஈடுபடுவோர் மீது பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.இந்து பெண்களை குறி வைத்து அவர்களுடன் வீட்டை விட்டு வெளியேறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், லவ் ஜிகாத்தை தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.திருமண மோசடி மற்றும் திருமணத்தால் கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க குஜராத் மத சுதந்திர திருத்தச்சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பசுவதை, நில அபகரிப்பு மற்றும் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவந்துள்ளதையும் முதலமைச்சர் எடுத்துரைத்து பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்