தனியார் ஹோட்டலில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் சிக்கிய இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.
தனியார்  ஹோட்டலில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு
x
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் சிக்கிய இரண்டு பேர் மீட்கப்பட்டனர். 

நெல்லிப்புழாவில் உள்ள தனியார் ஹோட்டலில், அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி மலப்புரத்தைச் சேர்ந்த முகமது பஷீர் மற்றும் பட்டாம்பியைச் சேர்ந்த புஷ்பலதா ஆகிய இருவர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் சிக்கிய இருவரை தீயனைப்பு வீரர்கள் காயங்களுடன் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த ஹோட்டலின் தரை தளத்தில் உள்ள, மசானி என்ற உணவகத்தில் ஏற்பட்ட தீ, மாடியில் உள்ள ஹோட்டலுக்கு பரவி முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில் தீவிபத்திற்கு மின் கசிவு காரணம் என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்