கணவருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - 8 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் கொடுமை

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கணவருடன் சென்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
கணவருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - 8 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் கொடுமை
x
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கணவருடன் சென்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். செட்டனப்பள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் கணவருடன் விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் கணவனை தாக்கிவிட்டு, அந்த பெண் மீது கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில், செட்டனபள்ளி போலீசார், வழக்குப்பதிவு செய்து தடயவியல் வல்லுநர்களுடன் சேர்ந்து, ஆதாரங்களை சேகரித்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 8 தொழிலாளர்களை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்