சாலையில் தரையிறங்குகிறது போர் விமானம்: சாலையில் விமானங்கள் தரையிறங்கும் ஒத்திகை

ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கும் ஒத்திகை இன்று நடைபெறுகிறது.
சாலையில் தரையிறங்குகிறது போர் விமானம்: சாலையில் விமானங்கள் தரையிறங்கும் ஒத்திகை
x
அவசர காலங்களில் போர் விமானங்களை சாலைகளில் தரையிறக்குவதற்காக நாடு முழுவதும் 12 தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக விமானப்படையினருடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானின் மாநிலம் பார்மரில்(BARMER) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மூன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு விமான ஒடுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் போர் விமானத்தை தரையிறக்கி, இன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின்கட்கரி ஆகியோருடன் விமானப்படை விமானம் நெடுஞ்சாலையில் சாலையில் தரையிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்