பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு - பிரதமர் மோடி தலைமை உரை

செப்டம்பர் 9இல் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு - பிரதமர் மோடி தலைமை உரை
x
செப்டம்பர் 9இல் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா ஆகிய ஐந்து முக்கிய வ‌ளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பு 2006இல் உருவாக்கப்பட்டது. இதன் 13ஆவது உச்சி மாநாடு, இந்தியாவின் தலைமையில், வரும் வியாழன் அன்று காணொளி மூலம் நடத்தப்பட உள்ளது. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ (Jair Bolsanaro), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். தலைமை உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பன்னாட்டு உறவுகளில் சீர்திருத்தங்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது. பிரதமர் மோடி தலைமை வகிக்கும் இரண்டாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்