கொரோனா பரவலால் வியாபாரம் மந்தம் : விநாயகர் சதுர்த்தி வியாபாரம் 20% குறைவு

கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்தி விற்பனை குறைந்துள்ளதாக மும்பையில் உள்ள அலங்காரப்பொருள் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலால் வியாபாரம் மந்தம் : விநாயகர் சதுர்த்தி வியாபாரம் 20% குறைவு
x
கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்தி விற்பனை குறைந்துள்ளதாக மும்பையில் உள்ள அலங்காரப்பொருள் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவதால் செயற்கை பூக்கள், ஒளியூட்டப்படும் அலங்காரப்பொருட்களின் வியாபாரம் கலைக்கட்டும். தற்பொழுது கொரோனா பரவலால் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மாநில அரசு அறிவித்துள்ளதால், அலங்காரப்பொருட்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக மும்பையில் உள்ள அலங்காரப்பொருள் விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்