பாதுகாவலர் தற்கொலை வழக்கு - சம்மன் அனுப்பிய போலீசார்

பாதுகாவலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மேற்கு வங்காளத்தின் எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரிக்கு சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பாதுகாவலர் தற்கொலை வழக்கு - சம்மன் அனுப்பிய போலீசார்
x
பாதுகாவலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மேற்கு வங்காளத்தின் எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரிக்கு சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சுவேந்து அதிகாரியின் பாதுகாவலர் சப்ரதா சக்ரபோத்தி கடந்த 2018ஆம் ஆண்டு  தற்கொலை செய்துகொண்டார்.  தனது கணவரின் உயிரிழப்பில் சுவேந்து அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாக கூறி சப்ரதா சக்ரபோத்தியின் மனைவி புகார் அளித்தார். இந்த நிலையில், சப்ரதா சக்ரபோத்தியின் உயிரிழப்பு வழக்கை கடந்த ஜூலை மாதம் சிஐடிபோலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், நாளை நேரில்  ஆஜராகுமாறு சுவேந்து அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 





Next Story

மேலும் செய்திகள்