கேரளாவில் பி தி வாரியர் பிரசாரத்தை பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

கேரளாவில் கொரோனா பாதுகாப்பிற்காக சுகாதார துறையால் தொடங்கப்பட்ட பி தி வாரியார் பிரசாரத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
கேரளாவில் பி தி வாரியர் பிரசாரத்தை பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்
x
கேரளாவில் கொரோனா பாதுகாப்பிற்காக சுகாதார துறையால் தொடங்கப்பட்ட பி தி வாரியார் பிரசாரத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். பிரச்சாரத்தின் சின்னத்தை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் வழங்கி அவர் வெளியிட்டார். பின்னர் பேசிய பினராயி விஜயன், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இரண்டு தடுப்பூசி டோஸ் எடுத்துக் கொள்வதை உறுதி செய்வதே, இந்த பிரசாரத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். நாம் ஒவ்வொருவரும் தன்னலமற்ற போராளிகளாக இருக்க  வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்