பருவநிலை மாற்றம் - இந்தியாவிற்கு எச்சரிக்கை - பெங்களூரு ஐஐடி ஆய்வு

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
x
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐஐடி ஆய்வு முடிவுகள் குறித்து விரிவாக பார்ப்போம்.அண்மை காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றத்தின் கோரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.இது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. புவி வெப்பமயமாவதால், பனிமலை உருகுதல், கடல் மட்டம் உயர்வு, சீரற்ற பருவமழை என பல சிக்கல்கள் உண்டாகி வருகின்றன.. இதுகுறித்து ஐஐடி கவுகாத்தியுடன் இணைந்து ஐஐடி பெங்களூரு நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.நாட்டில் உள்ள 612 மாவட்டங்களும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கக்கூடும் எனவும் குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 100 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்