பயணிகளை அதிகரிக்க பேருந்து நிலையங்களில் மதுக்கடைகள் - கேரள அமைச்சர் ஆண்டனி ராஜூ

கேரளாவில் பேருந்து நிலையங்களில் மதுக் கடைகள் திறந்து பயணிகளை அதிகரிக்கச் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கேரள அமைச்சர் கூறியுள்ளார்.
பயணிகளை அதிகரிக்க பேருந்து நிலையங்களில் மதுக்கடைகள் - கேரள அமைச்சர் ஆண்டனி ராஜூ
x
கேரளாவில் பேருந்து நிலையங்களில் மதுக் கடைகள் திறந்து பயணிகளை அதிகரிக்கச் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கேரள அமைச்சர் கூறியுள்ளார். கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவின் பேருந்து நிலையங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்ட‌டங்களை யாரும் வாடகைக்கு வாங்க முன்வராத‌தால், வருமானம் இல்லை என்றார். மேலும், மதுக்கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பேருந்து நிலையங்களிலே மதுக்கடைகளை திறக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்