"தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

60 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வடகிழக்கு மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுகொண்டுள்ளார்.
தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
x
60 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வடகிழக்கு மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுகொண்டுள்ளார். மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் வடகிழக்கு  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் உயர்மட்ட ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சுகாதார துறை செயலாளர் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, முதல் டோஸ் விரைவாக செலுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திருப்திகரமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்