காதலனுடன் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனுடன் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
x
கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன், நேற்று மாலை அங்குள்ள சாமுண்டி மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வழியில் மர்மநபர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தை மறித்து பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என கூறியதை ஏற்றுக் கொள்ளாத மர்ம நபர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சென்றுள்ளனர். உடனடியாக மருத்துவமனை தரப்பிலிருந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மைசூரு போலீசார் குற்றப் பிரிவு 376 வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்