குழந்தைகள் இருந்தால் மாதம் ரூ.2000 - கேரள கிறிஸ்தவ சபை அறிவிப்பு

உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நான்கிற்கு மேல் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மாதம் 2000 ரூபாய் வழப்படும் என கேரள கிறிஸ்தவ சபை அறிவித்துள்ளது.
குழந்தைகள் இருந்தால் மாதம் ரூ.2000 - கேரள கிறிஸ்தவ சபை அறிவிப்பு
x
தேவாலயத்திற்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பாலா சீரோ மலபார் கத்தோலிக்க சபை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 2000வது ஆண்டிற்கு பிறகு திருமணம் செய்து நான்கிற்கு மேல் குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும், 4வது குழந்தையின் பிரசவ செலவு ஏற்கப்படும், குழந்தைகளுக்கு கிறிஸ்துவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்படும், வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவாலயத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற கத்தோலிக்க சபை இதற்கான சுற்றறிக்கையை மற்ற ஆலயங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று பத்தினம்திட்டா மலங்கரை கத்தோலிக்க சபையும் ஆலய உறுப்பினர்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்