அரசியலை விட்டு விலகுகிறார், பாபுல் சுப்ரியோ

அரசியலை விட்டு விலகுவதாக முன்னாள் மத்தியமைச்சரும், பாஜக எம்பியுமான பாபுல் சுப்ரியோ அறிவித்துள்ளார்.
அரசியலை விட்டு விலகுகிறார், பாபுல் சுப்ரியோ
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியலை விட்டு விலகுவதாகவும், சமூக பணி செய்ய ஒருவர் அரசியலில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். திரிணாமுல், காங்கிரஸ் போன்ற எந்த கட்சிகளும் தம்மை அழைக்கவில்லை என்றும், வேறு கட்சியில் இணைய போவது இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் பாடகராக வலம் வந்த பாபுல் சுப்ரியோ, கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, 8 ஆண்டுகள் மத்திய அமைச்சராக பதவி வகித்த நிலையில், சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு மேற்கு வங்க மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியதே காரணம் என பேசப்பட்டது. டோலிகஞ்சே தொகுதியில் போட்டியிட்ட பாபுல் சுப்ரியோ, தோல்வியை தழுவியிருந்தார். இந்த சூழ்நிலையில், எம்பி பதவியையும்  ராஜினாமா செய்ய போவதாக பாபுல் சுப்ரியோ அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்