மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்

கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....
மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்
x
கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.... நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு.கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் மானசா மாதவன். 24 வயதான இவர், கொச்சி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தன் கல்லூரி அருகே உள்ள விடுதியில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ராஹில் என்ற இளைஞர், மானசாவை வலுக்கட்டாயமாக அங்குள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.  இதில் மானசாவின் வலது காது, மற்றும் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மானசா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற ராஹிலும் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 32 வயதான ராஹில் ஆர்கிடெக்சராக வேலை பார்த்து வந்தார். இவரும் கண்ணூரை சேர்ந்தவர். ராஹிலும், மானசாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராஹிலின் நடவடிக்கை பிடிக்காததால் மானசா அவரை விட்டு விலகியதாக தெரிகிறது. இதனால் மானசா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் ராஹில். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்