இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு - வீடுகள் மீது விழுந்த பாறைகள்
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இமாச்சலபிரதேசம் கின்னூர் மாவட்டத்தில் இன்று காலை மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையில் இருந்து பெரிய அளவிலான பாறைகள் உருண்டு வீடுகள் மற்றும் கார்கள் மீது விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் அறிவித்துள்ளார்.
Next Story