தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..
x
தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.. மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 54 கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தத்தளிக்கும் வீடுகள் படகு மூலம் வெளியேறி வரும் மக்கள் யாரும் உதவவில்லை என குற்றச்சாட்டு சங்கலி பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். மீட்பு குழுவினர் யாரும் வராத நிலையில், படகுகள் மூலம் மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறினர்.

Next Story

மேலும் செய்திகள்