இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்
x
இந்நிலையில், போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் அத்தியாவசிய மற்றும்  மருத்துவ சேவைகளுக்காக  மட்டுமே மக்கள் வெளியில் செல்ல  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவகங்களில் ஆன்லைன் விநியோகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்