எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !

ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் மீட்டது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களால் அடுத்தடுத்து அதிரடி காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், ஆக்ராவின் எஸ்.எஸ்.பி முனிராஜ்.....
எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !
x
மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் எல்லை பகுதிக்குள் அமைந்துள்ள சம்பல் பள்ளத்தாக்கு... நகரங்களில் இருக்கும் பணக்காரர்களை கடத்தி பணம் பறிப்பதே இங்கு இருக்கும் கொள்ளையர்களின் வேலை... 
அப்படி கடத்தப்பட்டவர்தான், ஆக்ராவை சேர்ந்த பிரபல மருத்துவர், உமாகாந்த் குப்தா.... இவரை விடுவிக்க 5 கோடி ரூபாய் கேட்டு கொள்ளையர்கள் மிரட்ட, எந்த தொகையுமின்றி கடத்தப்பட்ட 24 மணி நேரத்திலேயே மீட்டு அதிரடி காட்டியுள்ளது, எஸ்.எஸ்.பி முனிராஜ் தலைமையிலான அதிரடி படை.... இந்த கும்பலை சேர்ந்த இளம்பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுள் தப்பி சென்ற சாம்பல் கும்பலின் தலைவர்  பதம் சிங் தோமரை சோதனைச்சாவடியில் வைத்து அடையாளம் கண்ட அதிரடி படையினர்..... கொள்ளையனையும் அவரது கூட்டாளியையும் துரத்தி சென்று சுற்றி வளைக்க, பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்,  முனிராஜ் தலைமையிலான அதிரடி படையினர்....
இதில் இரண்டு கொள்ளையர்களும் கொல்லப்பட்ட நிலையில்,  குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் போலீசார் அனைவரும் உயிர்தப்பினர்.. இந்நிலையில் தான் மீண்டும் அனைவரையும் உற்று பார்க்கை வைத்துள்ளார், ஆக்ரா மாவட்டத்தில் எஸ்.எஸ்.பி ஆக பணியாறும் தமிழக சிங்கம், முனிராஜ்...தருமபுரி மாவட்டம் அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்த இவர், 2009ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று... கடந்த பிப்ரவரி மாதம் முதல் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வருகிறது.. பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மூன்று சம்பவங்களில் குற்றவாளிகளுடன் துப்பாக்கி சண்டை  என அதிரடி மேல் அதிரடி காட்டி வரும் தமிழர் முனிராஜ், தற்போது உ.பி மக்கள் கொண்டாடும் போலீஸ்காரராக வலம் வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்