மும்பையில் கன மழை - சாலை போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் பெய்த கனமழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியது.
மும்பையில் கன மழை - சாலை போக்குவரத்து பாதிப்பு
x
மும்பையில் பெய்த கனமழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் நிலையங்களில் தண்ணீர்  தேங்கியது. இதன் காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மிக,மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மும்பை, தானே, நவி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பை பகுதியில் சாலைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியுள்ளது. இதே போல ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உப்பர்மாலி ரயில் நிலையத்தில் தண்டவாளம் மழை நீரினால் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்