ஈகைத் திருநாள் - இஸ்லாமியர்கள் தொழுகை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜாமியா மஸ்திஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஈகைத் திருநாள் - இஸ்லாமியர்கள் தொழுகை
x
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜாமியா மஸ்திஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்று, தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.  கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள உல்லால் ஜுமா பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், தொழுகை நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் அனைவரும் பரஸ்பரம் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜமா மஸ்ஜித் கைருதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகையில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஒன்று கூடினர். அப்போது, தியாகத் திருநாளை போற்றும் வகையில், பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்