மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமன அறிவிப்பு - தேவசம் போர்டின் அறிவிப்பை எதிர்த்து மனு
சபரிமலை மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமிப்பதற்கான தேவசம் போர்டின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமிப்பதற்கான தேவசம் போர்டின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும், மாளிகைப்புறத்து அம்மன் கோயிலுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மேல்சாந்தி தேர்வு நடைபெறுவது வழக்கம். 2021-22ஆம் ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வில், மலையாள பிராமணர்களாக இருக்க வேண்டும் என, தேவசம் போர்டு நிபந்தனை விதித்துள்ளது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது என குற்றஞ்சாட்டிய கோட்டயத்தைச் சேர்ந்த விஷ்ணு நாராயணன் என்பவர், இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Next Story