மேகதாது அணை விவகாரம் : "அணை கட்டுவதை கர்நாடகா நிறுத்த வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் கூட்டத்தில் முடிவு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுத புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் : அணை கட்டுவதை கர்நாடகா நிறுத்த வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் கூட்டத்தில் முடிவு
x
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் புதுச்சேரியின் நெற்களஞ்சியமான காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சுட்டிக் காட்டினார். காரைக்கால் விவசாயம் பாதித்தால் புதுச்சேரி பின்னடவை சந்திக்கும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த இந்திய பிரதமர் மோடிக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்