மத்திய அமைச்சரவை விரிவாக்கம் - 43 - ல் 15 பேர் கேபினட் அமைச்சர்கள்

புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
x
புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், 43 பேரை மத்திய அமைச்சர்களாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  நாராயண் டாட்டூ ராணே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். இதே போல், அஷ்வினி வைஷ்ணவ், பசுபதி குமார் பராஸ், கிரண் ரிஜிஜூ, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகி உள்ளனர். மான்சுக் மாண்ட்வியா, பூபேந்தர் யாதவ், பர்சோத்தம் ரூபாலா, கிஷன் ரெட்டி மற்றும் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோரும் கேபினட் அமைச்சர்கள் ஆவர். 


Next Story

மேலும் செய்திகள்