செப்.10 முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
செப்.10 முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் - முகேஷ் அம்பானி அறிவிப்பு
x
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்,  அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இணைய வழியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பங்குதாரர்கள் உட்பட பலர் காணொலி மூலம் பங்கேற்றனர். அப்போது பேசிய முகேஷ் அம்பானி கொரோனா காலத்திலும் ரிலையன்ஸ் குழுமம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் கூட்டாக இணைந்து ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கி இருப்பதாக தெரிவித்த முகேஷ் அம்பானி, இந்த போன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் இன் உகந்த பதிப்பால் இயக்கப்படும் என்று குறிப்பிட்டார். ஜியோபோன் நெக்ஸ்ட் எனும் இந்த புதிய ஸ்மார்ட் போன் செப்டம்பர் 10ஆம் முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்