இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் - 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
x
இதன் மூலம் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதனால் 81 கோடியே 35 லட்சம் பேர் பலனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்த விநியோக செலவையும் ஏற்றுக் கொள்வதால்,  மத்திய அரசுக்கு 67,266. கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இன்று பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்