மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 நாளில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு இதுவரை29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 நாளில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்
x
மத்திய அரசு இதுவரை29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா  தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது ஒரு கோடியே 92 லட்சத்து 465 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்றும்,  காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில்,  விரயமானது உள்பட மொத்தம் 27 கோடியே 76 லட்சத்து 26, ஆயிரத்து 985 டோஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 3  நாட்களில் கூடுதலாக 39 லட்சத்து 7 ஆயிரத்து 310  டோஸ்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்