டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு
பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.
பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர். கத்தார் நாட்டின் தோஹாவில் இருந்து, கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கொச்சிக்கு ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஷரோன் சிக்வாசா கடந்த 19 தேதி வந்துள்ளார். அவரின் பொருட்களை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில், மூன்றரை கிலோ ஹெராயின் போதை பொருளை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியதில், மேலும் 2பேர் ஹெராயின் போதை பொருளுடன் பெங்களூரு வழியாக டெல்லி சென்று உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த இருவரையும் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
Next Story